கர்நாடகா: இந்து பெண்ணிடம் பேசியதற்காக சிறுபான்மை மாணவர் மீது தாக்குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடகாவில் இந்து பெண்ணிடம் பேசியதற்காக சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 18ம் தேதி யாத்கிர் மாவட்டத்தில் கல்லூரி முடிந்து வீடு திரும்பிய ஒரு மாணவர், செல்போனில் இந்து பெண்ணிடம் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது 9 பேர் கொண்ட குழுவினர் அந்த மாணவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவரை ஒரு அறையில் வைத்து 5 மணி நேரத்திற்கும் மேலாக தாக்கியதாகவும், கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day