இந்திரா நினைவிடத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் மலர்தூவி மரியாதை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 107வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் ராகுல்காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமரான இந்திரா காந்தியின் பிறந்தநாளான இன்று டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். முன்னதாக மக்களவை எதிர்கட்சி தலைவரும், இந்திரா காந்தியின் பேரனுமான ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தேசியத்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் நினைவிடத்தில் மலர்களை தூவி மரியாதை செலுத்தினர்.

varient
Night
Day