அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடகாவில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி தன்னுடைய வாக்கை செலுத்தினார். பலத்த பாதுகாப்புடன் வந்த நாராயண மூர்த்தி, ஜனநாயக கடமையை ஆற்றினார்.

கேரளாவில் உள்ள 20 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான நடைபெற்று வரும் தேர்தலில் கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வாக்களித்தார்.

இதேபோல் நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் பிரகாஷ்ராஜ் வாக்களித்தார். அப்போது பேசிய அவர், என் வாக்கு எனது உரிமைக்காகவும், நாடாளுமன்றத்தில் என் வேட்பாளரின் குரல் ஒளிப்பதற்காகவும் தனது வாக்கை செலுத்தியதாக கூறினார்.  

கேரளா மாநிலம் திருச்சூரில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகர் கோபி அத்தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கை செலுத்தினார்.


varient
Night
Day