அசாம் : ராகுல் யாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி நடைபயணத்திற்கு அசாம் காவல்துறை தடைவிதித்துள்ள நிலையில், அவரின் கண்முன்னே காங்கிரஸ் தொண்டர்கள் மீது காவல்துறை தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர், நாகலாந்து மாநிலங்களை தொடர்ந்து அசாமில் ராகுல் காந்தியின் தலைமையில் பாரத் ஜோடோ நியாய யாத்திரை நடைபெற்று வருகிறது. இதனால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என முதலமைச்சர் ஹிமந்த் பிஷ்வா சர்மா எச்சரித்த நிலையில் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில் கவுஹாத்தியில் ராகுல் காந்தியின் வாகனத்தை தடுத்து நிறுத்தியதால் காவல்துறையினருக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ராகுல்காந்தி கண்முன்னே தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day