எழுத்தின் அளவு: அ+ அ- அ
பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாட்டின் 4 விமானப்படை தளங்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பாகிஸ்தான் தொடர்ச்சியாக ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டது. இதையடுத்து இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ட்ரோன்களை நடுவானிலேயே செயலிழக்கச் செய்து வருகிறது. ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி நகரங்களில் உள்ள நுர்கான், முரித், ரபிக் உள்ளிட்ட 4 விமான தளங்களை இந்திய ராணுவம் வானில் இருந்து தரையை தாக்கும் ஏவுகணைகள் மூலமாக தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் நான்காவதாக பாகிஸ்தானின் மேலும் ஒரு விமான தளம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.