மயிலாடுதுறை ரயில் நிலையம் - நூழிலையில் உயிர் தப்பிய பயணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து கால் இடறி விழுந்த பயணியை ரயில்வே காவலர் பத்திரமாக மீட்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. 

சென்னையை சேர்ந்த அருள்தாஸ் என்பவர் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றுள்ளார். மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு வந்தபோது ஓடும் ரயிலில் இருந்து அவர் இறங்கியதாக கூறப்படுகிறது. அப்போது நடைமேடைக்கும் ரயிலுக்கும் நடுவே சிக்கும் வகையில் கால் இடறி விழுந்த பயணியை, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே காவலர் புருஷோத்தமன் துரிதமாக செயல்பட்டு பத்திரமாக மீட்டார். ரயில்வே காவலரின் துரித செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

Night
Day