தூத்துக்குடி : காங்கிரஸ் மாவட்ட முன்னாள் துணை தலைவர் தீக்குளிக்க முயற்சி - ரூ.10 கோடி பெற்றுக்கொண்டு வேட்பாளர் அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் அறிவிப்புக்கு 10 கோடி ரூபாய் பெறப்பட்டதாக கூறி தூத்துக்குடி காங்கிரஸ் மாவட்ட முன்னாள் துணை தலைவர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மக்களவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி, இதுவரை 138 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஒரு சிலருக்கும் மட்டுமே தொடந்து சீட் வழங்குவதாகவும்,  காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் அறிவிப்புக்கு 10 கோடி ரூபாய் பெறப்பட்டதாகவும் கூறி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணை தலைவர் அய்யலுச்சாமி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அய்யலுச்சாமியை தடுத்தி நிறுத்தி காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day