தமிழ்நாட்டில் இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் 15 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வெளியில் செல்ல முடியாமல் பொதுமக்கள் அல்லாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மேலும் ஒடிசா மாநிலத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், மேற்குவங்க மாநிலத்தில் சிவப்பு எச்சரிக்கையும் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தை பொறுத்தவரை ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு அறிவித்துள்ளது.

Night
Day