தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம் மற்‌‌றும் புது‌ச்சேரியில் இன்று முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றன.

ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறவுள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள் உட்பட மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 024 மாணவர்கள் எழுதுகின்றனர். இதற்காக 4 ஆயிரத்து 107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 235 கைதிகளும் 10ம் வகுப்பு தேர்வை எழுதவுள்ளனர். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை கண்க‌ணிக்க 4 ஆயிரத்து 591 பறக்கும் படைகள் அமைக்கப்‌பட்டுள்ளன. இதையடுத்து தேர்வு முடிவுகள் மே10ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Night
Day