மகாராஷ்டிரா : ரூ.23 லட்சத்திற்காக கடத்தப்பட்ட 9 வயது சிறுவன் கொடூரக் கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிர மாநிலத்தில் 23 லட்ச ரூபாய் பணத்திற்காக கடத்தப்பட்ட 9 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தானேவை அடுத்த கோரேகான் கிராமத்தைச் சேர்ந்த அந்த சிறுவன், கடந்த ஞாயிற்றுக்கிழமை மசூதிக்கு தொழுகைக்காக சென்று விட்டு திரும்பிய போது,  கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே சிறுவனின் பெற்றோரை தொடர்பு கொண்ட நபர், புதிதாக வீடு கட்ட 23 லட்ச ரூபாய் தேவைப்படுவதால் அதை தருமாறு கேட்டு மிரட்டி விட்டு இணைப்பை துண்டித்ததாக சொல்லப்படுகிறது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த தையல்காரர் ஒருவரின் வீட்டில் சிறுவனது சடலம் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Night
Day