எழுத்தின் அளவு: அ+ அ- அ
கழக நிர்வாகி டாக்டர் ரூபம் கே. வேலவனின் தாயார் மறைவுக்கு, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். <br><br>
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தூத்துக்குடி வடக்கு மாவட்டம், முன்னாள் ஒன்றியக் கழக செயலாளரும், மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை இணை செயலாளருமான டாக்டர் ரூபம் கே.வேலவனின் தாயார் கே.பிச்சம்மாள் நாச்சியார் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார். <br><br>
தனது தாயை இழந்து வாடும் ரூபம் கே.வேலவனுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.