கன்னியாகுமரி லெமூர் பீச்சில் கடல் அலையில் சிக்கி மருத்துவ மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம் லெமூரியா பீச்சில் குளிக்க சென்ற 5 மருத்துவ கல்லூரி மாணவர்கள் அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தென்தமிழக கடல் பகுதிகளில் கடல் சீற்றம் காணப்படும் என்பதால் கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் இறங்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில் திருச்சியில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த 12 மருத்துவ கல்லூரி மாணவர்கள் லெமூரியா பீச்சுக்கு சென்றுள்ளனர். இதில் 7 பேர் கடலில் இறங்கிய நிலையில் 5 பேர் அலையில் அடித்து செல்லப்பட்டனர். தகவலறிந்து சென்ற கடலோர காவல்படையினர் சுருதி, சரண்யா உட்பட 5 பேரை சடலமாக மீட்டனர். காயங்களுடன் 2 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Night
Day