இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 24 தமிழக மீனவர்கள் சென்னை வருகை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு சென்னை வந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேர், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 24 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை 2 விசை படகுகள், மீன்கள் மற்றும் வலைகளை பறிமுதல் செய்தது. இந்நிலையில், கடந்த 4ம் தேதி இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 24 பேரும், கொழும்புவில் இருந்து நேற்று விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களை வரவேற்ற மீன்வளத்துறை அதிகாரிகள், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். 

Night
Day