பசிபிக்‍ ஆளில்லா தீவில் சிக்‍கித் தவித்த 3 மாலுமிகள் மீட்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பசிபிக்‍ தீவில் ஒரு வாரத்துக்‍கு மேலாக சிக்‍கித் தவித்த 3 மாலுமிகளை அந்நாட்டு கடலோர பாதுகாப்புக்‍கான கடற்படையினர் பத்திரமாக மீட்டனர். ஈஸ்டர் வார விடுமுறையை ஒட்டி அமெரிக்‍காவை சேர்ந்த 3 மாலுமிகள் சிறிய படகில் மீன் பிடிக்‍க சென்றுள்ளனர். ஆனால் தவறுதலாக அவர்கள் பசிபிக்‍ பெருங்கட​லில் மனிதர்கள் யாரும் வசிக்‍காத 32 ஏக்‍கர் பரப்பிலான பைக்‍லாட் தீவில் ஒரு வார காலமாக சிக்‍கி தவித்தனர். அவர்கள் அங்குள்ள பனை ஓலைகளால் கடற்கரை மண்ணில் HELP என எழுதி வைத்து காத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பு வீணாகவில்லை. இதனை கண்ட அமெரிக்‍க கடலோர பாதுகாப்புக்‍கான கடற்படை விமானிகள் 3 பேரை பத்திரமாக மீட்டனர். தாங்கள் மீட்கப்படுவோம் என்ற அவர்களின் மன உறுதியை கடற்படையினர் பாராட்டினர்.

Night
Day