நாகை-இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டானா புயல் காரணமாக, நாகை-இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று ரத்து செய்யப்பட்டது. 


வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று தீவிர புயலாக உருவெடுத்துள்ளது. இன்று இரவோ அல்லது நாளை காலையோ கரையை கடக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு செல்லும் சிவகங்கை என்ற தனியார் பயணிகள் கப்பல் சேவை இன்று ஒருநாள் ரத்து செய்யப்படுவதாக கப்பல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

varient
Night
Day