ராஜபாளையம் : சமத்துவபுர குடியிருப்பு சுவர்களில் விதிமுறைகளை மீறி வரையப்பட்ட உதயசூரியன் சின்னம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி சமத்துவபுரம் குடியிருப்பு சுவர்களில் திமுகவின் உதயசூரியன் சின்னம் வரையப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. சமத்துவபுரத்தில் உள்ள 100 வீடுகளிலும் இது போன்று வரையப்பட்டுள்ளதாகவும் இதற்கு திமுகவினர் தங்களிடம் அனுமதி கூட கேட்க வில்லை என்று குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனனர். இதனை தேர்தல் அதிகாரிகள் கண்டு  கொள்ளாமல் இருப்பதாக வேதனை தெரிவிக்கும் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Night
Day