சாலையோர பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து - 5 பேர் படுகாயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சாலையோர பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். சான்றோர்குப்பம் பகுதி ஆட்டோ ஓட்டுநர் சரவணன் தனது உறவினர்கள் 5 பேருடன் வேலூருக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது வீரவர் கோயில் பகுதி அருகே முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க ஆட்டோவை திருப்பியபோது சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில், சரவணன் மற்றும் அவரது மகன், மாமா உள்ளிட்ட 5 பேரும் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சென்ற ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day