கழக நிர்வாகியின் தாத்தா மறைவு - புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த கழக மாவட்ட மாணவரணி பொருளாளர் சி. பாலகிருஷ்ணனின் தாத்தா மறைவுக்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஈரோடு மாவட்டம், பெருந்துறை காடபாளையத்தை சேர்ந்த திரு.K.ஜெகதீஷின் தந்தையும், கழக மாவட்ட மாணவரணி பொருளாளர் திரு. சி.பாலகிருஷ்ணனின் தாத்தாவுமான R. கிருஷ்ணன், இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்தார். 

தனது தாத்தாவை இழந்து வாடும் திரு.சி.பாலகிருஷ்ணனுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

Night
Day