கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு உற்சாக வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 54-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் வாணக்கன்காடு கிராமத்தில் நடைபெறுகின்ற கழக ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருச்சி வருகை தந்த அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 54-வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வாணக்கன்காடு கிராமத்தில் இன்று மாலை கழக ஆண்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி வந்தடைந்தார். விமானநிலையத்தில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

Night
Day