சாலையின் சென்டர் மீடியனில் இருசக்கர வாகனம் மோதி விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ஆலந்தூர் அருகே சாலையின் சென்டர் மீடியனில் பைக் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கால்வின் கென்னி மற்றும் சித்தார்த்தன் ஆகிய இருவரும் ஐபிஎல் போட்டியை கண்டு களித்துவிட்டு ஆலந்தூர் மெட்ரோ சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையின் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், மாணவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day