பாகிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் கனமழை - 36 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் 36 பேர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் முர்ரி மற்றும் கலியாத் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனிடையே, கடந்த  3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதுவரை கனமழைக்கு 36 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,  பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர். 

Night
Day