பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்‍கு : முக்‍கிய குற்றவாளிகளின் புகைப்படங்களை ​வெளியிட்டது என்.ஐ.ஏ.

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்டு வரும் முக்‍கிய குற்றவாளிகளின் புகைப்படத்தை தேசிய புலனாய்வு முகமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கடந்த 1-ம் தேதி நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் முஸாவிர் ஹூசைன் ஷாஜிப், அப்துல் மாத்தேன் தாஹா ஆகியோர் தேடப்படும் குற்றவாளிகள் என்றும் அறிவித்துள்ளது. புகைப்படத்தில் உள்ளவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் அவர்களது விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அவர்களுக்கு 10 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் என்.ஐ.ஏ அறிவித்துள்ளது. இருவரும் போலிப் பெயர்களில் பல்வேறு இடங்களில் தலைமறைவாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

Night
Day