மயிலாடுதுறையைச் சேர்ந்த 14 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மயிலாடுதுறையைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஒரு படகுடன் 14 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதையடுத்து மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்ப்பிடித்து கொண்டிருந்த போது, காங்கேசன் துறை வடக்கு கடற்பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது நடவடிக்கை மேற்கொண்டனர். மயிலாடுதுறையை சேர்ந்த ஒரு மீன்பிடி விசைப் படகையும், அதிலிருந்த 14 மீனவர்களையும் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். மீனவர்கள் அடுத்தடுத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதால் சக மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.  

varient
Night
Day