கூட்டுறவு சங்க அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை, வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்த கூட்டுறவு சங்க அதிகாரிகள் மீதும், உடந்தையாக இருந்த துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை, பீளமேட்டில் உள்ள மில் தொழிலாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் மூலம் வீட்டுமனை ஒதுக்கப்பட்ட நிலையில், சாலை, தெருக்கள் போன்ற பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை, கூட்டுறவு சங்க அதிகாரிகள் நகராட்சி வசம் ஒப்படைக்காமல் உறுப்பினர்களுக்கு விற்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் முகமது சபீக் அடங்கிய அமர்வு, பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை விற்பனை செய்த கூட்டுறவு சங்க அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டதுடன், சங்கத்துக்கு ஏற்பட்ட நிதி இழப்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வசூலிக்கவும் உத்தரவிட்டது. மேலும் அந்த நிலத்தை 3 மாதங்களில் கையகப்படுத்தி பராமரிக்க, கோவை மாநகராட்சிக்கு ஆணையிட்டது.

Night
Day