எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 35 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

எழுத்தின் அளவு: அ+ அ-

எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்க சென்ற 35 மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மீனவர்களிடமிருந்த ஒரு நாட்டு படகு மற்றும் 3 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

varient
Night
Day