துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 3.50 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் ஐதராபாத் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. ஐதராபாத்தில் உள்ள ஷம்ஷாபாத் விமான நிலையத்திற்கு துபாயில் இருந்த வந்த விமான பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், இந்தியா பயணியின் உடைமையில் 3 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூன்றரை கிலோ தங்க கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து தங்கக் கட்டிகளை வெளியில் எடுத்துச் செல்ல அங்கு வேலை செய்யும் துப்புரவு தொழிலாளர்கள் இரண்டு பேர் உதவியதும் தெரிய வந்தது. தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் மூன்று பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Night
Day