வயநாடு நிலச்சரிவு - தேசிய பேரிடராக அறிவிக்க ராகுல் வலியுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தின் மக்களவையில் உரையாற்றிய அவர், வயநாட்டு நிலச்சரிவை தனது சகோதரியுடன் சென்று பார்வையிட்டதாக தெரிவித்தார். மேலும், இந்த நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காணவில்லை என்றும் கூறிய ராகுல் காந்தி, மத்திய அரசு, வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவித்து உடனடியாக நிவாரண தொகையை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

varient
Night
Day