பிரபல எழுத்தாளர் ஜேகே ரவ்லிங்கிற்கு கொலை மிரட்டல் : கொலை மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை
Aug 14 2022 5:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், பிரபல எழுத்தாளர் ஜேகே ரவ்லிங்கிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
உலகின் பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி நியூயார்க் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய போது அவரை 24 வயது ஹாதி மடார் என்பவர் கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த ருஷ்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில், ஹாரி பாட்டர் எழுத்தாளரான ஜேகே ரவ்லிங்கிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீர் ஆசிப் அஜீஸ் என்ற பெயரில் டிவிட்டர் கணக்கு கொண்ட ஒரு நபர், கவலைப்படவேண்டாம் அடுத்து நீங்கள் தான் என கொலை மிரட்டல் விடுத்து டுவிட் செய்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த ஜேகே ரவ்லிங்கிற்கு டிவிட்டரில் கொலை மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.