திருப்பூர் அருகே தடுப்பூசி போடப்பட்ட 4 மாத குழந்தை உயிரிழப்பு : குழந்தையின் மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை
Sep 28 2023 7:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தடுப்பூசி போடப்பட்ட 4 மாத ஆண் குழந்தை, உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்த கபின் - ஏஞ்சலின் ரூபீஸியா தம்பதிக்கு, சுஜன் என்ற 4 மாத குழந்தை இருந்தது. இந்த குழந்தைக்கு நேற்று முத்தாண்டிபாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 2ம் தடுப்பூசி போடப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் இன்று காலை குழந்தை அசைவின்றி கிடந்ததை கண்டு அச்சமடைந்த பெற்றோர், குழந்தையை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், குழந்தையின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.