உசிலம்பட்டி அரசு மருத்துவமனை மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு : நோயாளிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்ப்பு
Sep 23 2023 4:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அவர சிகிச்சை வார்டின் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்ததால் நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர். உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவு நுழைவாயிலில் உள்ள மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்தது. இதனைக் கண்ட நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். அச்சமயத்தில் அங்கு நோயாளிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தரமில்லாத பொருட்களால் கட்டடம் கட்டப்பட்டுள்ளதால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதாக நோயாளிகள் தெரிவித்தனர்.