சென்னையில் கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற சினிமா துணை நடிகர் பலி : குடிபோதையில் விபத்து ஏற்படுத்திய மற்றொரு சினிமா துணை நடிகர்
Jun 8 2023 5:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற சினிமா துணை நடிகர் பரிதாபமாக உயிரிழந்தார். மதுரவாயல் தனலட்சுமி தெருவை சேர்ந்த சரண்ராஜ் என்பவர், வடசென்னை, அசுரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், சரண்ராஜ் பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் கே.கே நகர் வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று, சரண்ராஜ் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மது போதையில் காரை ஓட்டிய நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர் சாலிகிராமம் எம்சி அவென்யூ பகுதியை சேர்ந்த பழனியப்பன் என்பதும், சினிமாவில் துணை நடிகராக உள்ளதும் தெரியவந்தது.