ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகத்தில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு : அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு
Jun 3 2023 2:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒடிசா சோக ரயில் விபத்தை தொடர்ந்து, தமிழக அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே எதிர்பாராதவிதமாக 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 260க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தை தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்தும் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. செம்மொழி பூங்காவில் அரசு சார்பில் திறந்து வைப்பதாக இருந்த மலர் கண்காட்சி நிகழ்ச்சியும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகத்தில் இன்று துக்கம் அனுசரிக்கப்படுகிறது.