நீலகிரியில் கோடை சீசனையொட்டி ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்ட நெடுஞ்சாலைகள் : சீசன் முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதால் இரு வழிப்பாதையாக மாற்றம்
Jun 1 2023 3:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி மாவட்டத்தில் ஒரு வழிப்பாதையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட சாலைகள் மீண்டும் இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனையொட்டி, இதமான சூழலை அனுபவிக்க உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக, ஏப்ரல் மாத இறுதியில் இருந்து குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை ஆகிய சாலைகளும் ஒருவழிப் பாதையாக மாவட்ட நிர்வாகம் மாற்றி அமைத்தது. தற்போது பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், இவ்விரு சாலைகளும் இருவழிப் பாதைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து வாகனங்களும் கீழ்நோக்கி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.