கள்ளக்குறிச்சியில் மனைவியின் உறவினர்கள் தாக்கியதால் மனமுடைந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை - மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொள்ளும் வீடியோ வெளியானதால் அதிர்ச்சி
Feb 6 2023 1:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனது தற்கொலைக்கு மனைவி மற்றும் அவரது உறவினர்கள் தான் காரணம் என வீடியோ பதிவு செய்து கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணலூர் பேட்டை அருகே செம்படை கிராமத்தில் வசித்து வந்த வெற்றிவேல் என்பவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மனைவியின் உறவினர்களுக்கு அவர் அளித்த கடனை திருப்பி கேட்ட போது தகாத வார்த்தையில் பேசி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வெற்றிவேல் மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கு முன்னதாக வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார். அதில் தனது இறப்புக்கு மனைவி மற்றும் அவரது உறவினர்கள் தான் காரணம் என கூறியுள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், வீடியோ ஆதாரத்தை வைத்து வெற்றிவேலின் மனைவி மற்றும் உறவினர்களுடன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.