தைப்பூசத்தை முன்னிட்டு கன்னியாகுமரி தோவாளை சந்தையில் பூக்களின் விலை மூன்று மடங்காக உயர்வு- மல்லிகைப்பூ கிலோ ஆயிரத்து 300 ரூபாயாக அதிகரிப்பு
Feb 4 2023 2:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூச்சந்தையில் பூக்களின் விலை 3 மடங்காக உயர்ந்துள்ளது. தோவாளை பூச்சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. தைப்பூசம் மற்றும் சுப முகூர்த்தங்களை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ஆயிரத்து 300 ரூபாய்க்கும், பிச்சுப்பூ ஆயிரத்து 700ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடும் பனியின் காரணமாக பூக்கள் வரத்து குறைந்து இருந்தாலும், பண்டிகைக்காக பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. ஏராளமானோர் பூக்களை வாங்கி செல்வதால் தோவாளை பூச்சந்தை களைகட்டி உள்ளது.