அனைத்து விதமான ஒப்புதல்களும் பெற்ற பின்னரே பேனா நினைவு சின்னம் - தமிழ்நாடு பொதுப்பணித்துறை சார்பில் பதில் மனு
Feb 4 2023 1:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அனைத்து விதமான ஒப்புதல்களும் பெற்ற பின்னரே பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என தமிழ்நாடு பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. மெரினா கடற்கரையில் அமைய உள்ளா பேனா நினைவுச் சின்னத்திற்கு தடைகோரியும், ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள நினைவிடங்களின் உள்ள சுற்றுச்சூழல் விதிமீறல்களை ஆராயக்கோரியும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ராம்குமார் ஆதித்யன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த, வழக்கில் பதில்மனு தாக்கல் செய்த பொதுப்பணித்துறை, மெரினா கடற்கரையில் இருந்து கடலுக்குள் 360 மீட்டர் தொலைவில் பேனா சிலை அமைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. பேனா அமைக்க அனுமதிக்கக்கோரி மத்திய, மாநில அரசுகளிடம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு, மத்திய சுற்றுச்சூழல் துறையின் பரிந்துரைகள் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.