கடலூர் மத்திய சிறையில், சவுக்கு சங்கர் 3-வது நாளாக உண்ணாவிரதம் - உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதி
Oct 3 2022 4:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலூர் மத்திய சிறையில் 3வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள சவுக்கு சங்கருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமூக வலைதளத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்தும், நீதிபதிகள் குறித்தும் அவதூறாக பதிவிட்டது தொடர்பாக சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர், கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவரை பார்வையாளர்கள் சந்திக்க ஒரு மாதத்திற்கு விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சவுக்கு சங்கர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருவதால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர், சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.