ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜைக்காக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு கடைகள் திறப்பு
Oct 3 2022 3:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜைக்காக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், மக்கள் பொருட்கள் வாங்க அமைக்கப்பட்ட சிறப்பு கடைகளில் கூடுதலாக வாடகை கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழாவிற்கான பூஜை பொருட்களை விற்பனை செய்வதற்காக சென்னை கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் கூடுதல் சிறப்பு கடைகள் அமைப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் கடைகள் அமைப்பதற்கு சி.எம்.டி.ஏ. நிர்வாகம் சார்பில் ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது. அந்த ஒப்பந்த புள்ளியை கைப்பற்றிய திமுக ஆதரவு பெற்ற நபர் ஒருவர், நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 500 ரூபாயாக இருந்த கடைகளின் வாடகை கட்டணத்தை இரண்டாயிரம் ரூபாய் உயர்த்தி , 3ஆயிரத்து 500 ரூபாயாக வசூலித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே சென்னையில் குடும்பமாக தங்கி வேலை செய்துவரும் பெரும்பாலான மக்கள் தொடர் விடுமுறைக்காக தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால், வியாபாரம் சற்று பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளார்.