நாகையில் தொடர்மழை காரணமாக சம்பா சாகுபடி பணிகள் தீவிரம் - களைப்பு தெரியாமல் இருக்க நாட்டுப்புற பாடல்களை பாடி களையெடுப்பில் ஈடுபடும் பெண்கள்
Oct 3 2022 11:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகையில் தொடர்மழை காரணமாக சம்பா சாகுபடி பணிகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், களைப்பு தெரியாமல் இருக்க பெண்கள் நாட்டுப்புற பாடல்களை பாடி களையெடுத்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி திருப்பூண்டி, பாலக்குறிச்சி, செம்பியன்மகாதேவி, இறையான்குடி, ஓட்டத்தட்டை, நீடூர், தண்ணீலபாடி, உள்ளிட்ட பகுதிகளில் வயல்களை சீரமைத்தல், நாற்று விடுதல், உழவு பணி, நாற்றுப்பறித்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. களை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாய பெண்மணிகள், களைப்பு தெரியாமல் இருக்க நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி உற்சாகமாக வேலை செய்து வருகின்றனர்.