ராசிபுரம் அருகே சமூக வலைதளத்தில் சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக பதிவிட்ட இளைஞர் போக்சோவில் கைது
Jun 23 2022 5:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, சமூக வலைதளத்தில் சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக பதிவிட்ட இளைஞர், போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
ராசிபுரத்தை அடுத்துள்ள ஆர்.புதுப்பாளையத்தைச் சேர்ந்த மதியழகன் என்பவரின் மகன் அஜித், கணினி பொறியியல் படித்துவிட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன், கடந்த சில ஆண்டுகளாக பழக்கம் இருந்துள்ளது. சிறுமி, தனது வீட்டில் இருந்தபோது, அவரது சில புகைப்படங்களை அஜித் தனது செல்போனில் படம்பிடித்து, சிறுமியிடம் காட்டி மிரட்டியுள்ளார். மேலும், சிறுமியின் ஆபாச புகைப்படங்களையும் அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதையறிந்த சிறுமியின் தாயார், ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சமூக வலைதளத்தில் வெளியிட்ட அஜித்தை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். பின்னர் ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.