சேலத்தில் சாயக் கழிவுகள் கலப்பதால் நுரை பொங்கிய திருமணிமுத்தாறு : மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை
May 21 2022 2:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவுகள் கலப்பதால் ஆற்று நீர் பெரும் நுரை பொங்கி வழிகிறது.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி சில சாயப்பட்டறை உரிமையாளர்கள் சுத்திகரிப்பு செய்யாமல் சாயக்கழிவு நீரை திருமணிமுத்தாற்றில் திறந்துவிட்டு வருகின்றனர். இதன் காரணமாக திருமணிமுத்தாற்றில் நுரை பொங்கி மலை போல் காட்சி அளிக்கிறது. மேலும் திருமணிமுத்தாற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் நிலத்தடி நீரும் மாசடைந்து உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, சாயப்பட்டறைகளில் இருந்து ரசாயன கழிவுகள் திருமணிமுத்தாற்றில் கலப்பதை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.