தோழர் ஜீவானந்தத்தின் நினைவுநாள் : சென்னையில் உள்ள நினைவிடத்தில் நல்லகண்ணு மரியாதை
Jan 18 2022 5:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொதுவுடமை சிந்தனையாளர், தோழர் ஜீவானந்தத்தின் நினைவுநாளை யொட்டி, சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு. நல்லகண்ணு மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்ட வீரரும், பொதுவுடமை சிந்தனையாளருமான தோழர் ஜீவானந்தம் தீவிர தமிழ் பற்றாளராகவும் விளங்கினார். அவரது நினைவு நாளான இன்று, சென்னை காசிமேட்டில் உள்ள ஜீவானந்தத்தின் நினைவிடத்தில் பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தினர். தோழர் ஜீவானந்தத்திற்கு மரியாதை செலுத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு. நல்லகண்ணு, செய்தியாளர்களிடம் பேசினார். தமிழ்நாடு என பெயர் வைக்கப் போராடிய ஜீவானந்தம், வாழ்க்கையில் பெரும்பாலான காலத்தை சிறையில் கழித்தவர் என்றும் அவரது லட்சியத்தை நிறைவேற்ற போராட வேண்டும் என்றும் தெரிவித்தார்.