பாலியல் புகாருக்கு ஆளான, போலீஸ் அதிகாரி ராஜேஷ் தாசை கைது செய்யக்கோரி டிஜிபி அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக மாதர் சங்கம் போராட்டம் - ராஜேஷ் தாசுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
Mar 4 2021 1:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸை கைது செய்யக்கோரி சென்னையில் மகளிர் அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
சென்னை தமிழக காவல்துறை தலைமை அலுவலகம் முன்பு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.க்கு ஆதரவாகவும், குற்றம் சாட்டப்பட்ட டி.ஜி.பி. ராஜேஷ் தாஸை கைது செய்யக்கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். மேலும், ராஜேஷ் தாசுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.