விமான டிக்கெட் முறைகேடு புகார் தொடர்பான வழக்கு : முன்னாள் துணைவேந்தர் சரணடைந்தால் மட்டுமே ஜாமீன் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Nov 27 2020 12:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விமான டிக்கெட்டி முறைகேடு புகாரில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீர் முஸ்தபா உசேனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை துணைவேந்தராகப் பணியாற்றியவர் மீர் முஸ்தபா உசைன். அவர் கருத்தரங்கில் பங்கேற்க வெளிநாடு செல்வதற்கு சாதாரண இருக்கைக்கான டிக்கெட் எடுத்துவிட்டு உயர் வகுப்புக்கான டிக்கெட்டில் பயணம் செய்ததாகக் கூறி அவர் மீது மோசடி வழக்கு தொடரப்பட்டது. முஸ்தபா உசைன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், 24 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பு ஊழல் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனை எதிர்த்து உசைன், சென்னை உயர்நிதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நிதிமன்ற நீதிபதி திரு. பிராகஷ் தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்தார். மேலும் அவர் சரணடைந்தால் மட்டுமே ஜாமீன் வழங்கப்படும் என்றும் நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.