கீழடி அருகே மணலூரில் அகழ்வாய்வு பணிகள் தொடக்கம் - மனிதர்களின் வாழ்விடம் குறித்து ஆய்வு
May 23 2020 2:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிவகங்கை மாவட்டம் கீழடியில், 6-ம் கட்ட அகழாய்வில் 4-வது இடமான மணலூரில் அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
சிவகங்கை மாவட்டம் கீழடியில், கடந்த பிப்ரவரி 19-ம் தேதி 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கின. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மார்ச் 23-ம் தேதி அகழாய்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து, கடந்த 20-ம் தேதி அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கியது. 5-ம் கட்ட அகழாய்வில் கிடைத்த தொல்லியல் கட்டுமானப் பொருட்களின் தொடர்ச்சியை கண்டறியும் வகையில், 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக கீழடி, அகரம், கொந்தகை பகுதிகளில் அகழாய்வு பணிகள் தொடங்கின. நான்காவதாக மணலூரில் இன்று அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அகழாய்வு பணிகளை தொல்லியல் துறை துணை இயக்குனர் திரு.சிவானந்தம் தொடங்கி வைத்தார். மணலூர் பகுதி மனிதர் வாழ்விடமாக இருக்க வாய்ப்புள்ளதாக கருதி, பணிகளை நடைபெற்று வருவதாகவும், சுமார் 2 ஏக்கரில் பணிகள் நடப்பதாகவும் தெரிவித்தார். செப்டம்பர் இறுதிவரை பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், ஊழியர்கள் அனைவருக்கும் முக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், திரு.சிவானந்தம் குறிப்பிட்டார்.