அருந்ததியர் இன மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை அபகரித்த திமுக பிரமுகர் : பாதிக்கப்பட்ட மக்கள் கண்டனம்
Feb 11 2019 4:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அருந்ததியர் இன மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை திமுக பிரமுகர் அபகரித்துள்ளதற்கு பாதிக்கப்பட்ட மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம் அயோத்தியபட்டினம் கிராமம் பகுதியில் 1 புள்ளி 95 ஏக்கர் நிலத்தை, 1993 ஆம் ஆண்டு அருந்ததியர் இன மக்களுக்காக இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்தில் அரசு வழங்கியது. ஆனால் தற்போது சேலம் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் பாலன் மகன் பாண்டித்துரை அந்த நிலத்தை அபகரித்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்த அருந்ததியினர் மக்கள், அந்த இடத்தில் குடிசை அமைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக பிரமுகரின் அராஜகம் குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று சேலத்தில் நடந்த அருந்ததியர் இன சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் பேசியபோது அருந்ததியர் இனத்திற்காக திமுக பாடுபடும் என தெரிவித்த நிலையில் திமுக பிரமுகர் பாண்டித்துரை நிலத்தை அபகரித்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார்.