பெண்கள தடகள போட்டிகளில் பங்கேற்க மூன்றாம் பாலின வீராங்கனைக்களுக்கு உலக தடகள சம்மேளனம் தடை
Mar 24 2023 2:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெண்கள் கலந்து கொள்ளும் தடகள போட்டியில் மூன்றாம் பாலின தடகள வீராங்கனைகள் பங்கேற்க உலக தடகள சம்மேளனம் தடை விதித்துள்ளது. உலக அளவில் நடைபெறும் பெண்கள் தடகள போட்டிகளில் மூன்றாம் பாலின தடகள வீராங்கனைகளும், பெண் வீராங்கனைகளுடன் சேர்ந்து போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று வந்தனர். இதற்கு பெண் வீராங்கனைகள் தரப்பில் ஆட்சேபம் எழுப்பப்பட்டதாக கூறப்படும் நிலையில், மூன்றாம் பாலின தடகள வீராங்கனைகள் பெண்கள் தடகள போட்டியில் பங்கேற்க உலக தடகள சம்மேளனம் தடை விதித்துள்ளது.