இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட வாய்ப்பு - ரோகித், கோலி உள்ளிட்டோரை நீக்கவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்
Nov 30 2022 10:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டி-20க்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மாவை நீக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த டி-20 உலகக் கோப்பை தொடரில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது. இதனையடுத்து, டி-20க்கான அணியில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதன்படி, டி-20 அணிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு, நிரந்தர கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மூத்த வீரர்களான ரோஹித்சர்மா, கோலி உள்ளிட்டோரை டி-20 அணியிலிருந்து நிரந்தரமாகக் கழற்றிவிடவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 2024ம் ஆண்டு டி-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை உருவாக்கும் வகையில் இந்த கடின முடிவை பிசிசிஐ எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.