இந்தியா - ஆஸி. இரு தரப்பு பேச்சுவார்த்தை - ஆஸி. வெளியுறவு அமைச்சர் டெல்லி வருகை
Nov 20 2023 3:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த, ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வாங் டெல்லிக்கு வருகை தந்துள்ளார்.
டெல்லி பாலம் விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை இறுதி போட்டியை கண்டுகளிக்க வந்த ஆஸ்திரேலிய துணை பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள உள்ளார். பென்னி வாங், ரிச்சர்ட் மார்லஸ் இருவரும் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய - பசிபிக் பெருங்கடல் பகுதியில் இரு நாடுகளும் இணைந்து மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.