ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்ததாக ஒடிசா தலைமைச் செயலாளர் அதிகாரப்பூர்வ தகவல் : இறந்தவர்களில், சிலரது உடல்கள் இரண்டு முறை எண்ணப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக விளக்கம்
Jun 4 2023 5:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்ததாக ஒடிசா அரசின் தலைமை செயலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பகுதியில் நிகழ்ந்த கோர ரயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 288 பேர் உயிரிழந்ததாகவும், 700-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்ததாக ஒடிஷா அரசின் தலைமை செயலாளர் பிரதீப் ஜனா தெரிவித்துள்ளார். ஒரு சில உடல்கள் இரு முறை எண்ணப்பட்டதால் எண்ணிக்கை 288 ஆக அறிவிக்கப்பட்டதாக கூறிய அவர், ஆனால் தரவுகள் சரிபார்க்கப்பட்டதில் 275 பேர் உயிரிழந்தது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். உயிரிழந்தவர்களில் 88 பேரின் உடல்கள் மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஒடிசா தலைமை செயலாளர் பிரதீப் ஜனா கூறியுள்ளார்.